அரவம் ஆட்டேல்

ஆத்திச்சூடி நீதிகதைகள்

25. அரவம் ஆட்டேல்
(அரவம் - பாம்பு)
பாம்பைப் பிடித்து விளையாடதே !

இன்று கதை இல்லை கருத்து மட்டுமே..

காடு வெளி சித்தர் பாடலில் இருந்து நம் விளக்கத்தை தொடங்குவோம்..

பாம்பினைப் பற்றி ஆட்டாதே. 

விளக்கம்

        பாம்போடு விளையாடக்கூடாது.

இப் பொன்மொழி இடம்பெறும் பாடல்

                                   பாம்பினைப் பற்றியாட் டாதே -உனறன

                                   பத்தினி மார்களைப் பழித்துக் காட்டாதே

                                  வேம்பினை யுலகிலூட் டாதே -உன்றன்

                                   வீறாப்பு தன்னை விளங்க  நாட்டாதே.

விளக்கவுரை

  பாம்போடு விளையாடதே,மனைவியை இழிவாக பேசாதே,வேம்பு போன்ற கசப்பான செயலை உலகில் பரப்பாதே,தன்னுடைய திமிர் பிடித்த தன்மையைப் பிறர் அறிய நிலைத்திருக்கக்கூடாது.

பாம்போடு விளையாடுவதும் மனைவியை இழிவாக பேசுவதையும் தவறான கருத்துக்களை பரப்புவதையும் ஒரு சேர ஒப்பிட்டுள்ளார்..
சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது அனைவரும் அறிந்ததே...

பாம்பின் நஞ்சு ஒருவனை எவ்வாறு அழிக்குமோ.. அவ்வாறு மற்ற இரண்டும் செய்பவர்களை அழிக்கும்..

மேலும்
் "அரவம் ஆட்டேல்"

இதற்கு பொருள் என்ன? சிலர் அரவம் என்பதை பாம்பாக அர்த்தப்படுத்திக் கொண்டு பாம்புடன் விளையாடாதே என்று பயப்படுத்தும்படியாக பொருள் சொல்கிறார்கள். ஆனால் அரவம் என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன.

1. ஒலி
2. குழப்பமான சத்தம்
3. மணிகளுள்ள கொலுசு
4. நகரும் படையின் ஆர்ப்பரிப்பு
5. ஆசை
6. வில்லின் நாண்
7. இராகு-கேது

ஆக, இப்படியும் நாம் பொருள் கொள்ளலாமா?

சத்தம் செய்யாதே,

ஆசைப்படாதே,

நாணேற்றும் போது அசையாதே,

படையினர் மாதிரி ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்யாதே,

கொலுசை ஆட்டி கேட்பவர் நெஞ்சத்தில் ஆசையையோ அல்லது பயத்தையோ உருவாக்காதே,

அதிர்ந்து பேசாதே,

இராகு-கேதுவை கோபப்படுத்தாதே - அதாவது ஜோசியம் கேள்.

இவ்வளவு அர்த்தங்கள் உள்ளடக்கிய இதன் பொருள் இன்னும் நீளும்.....

காத்திருங்கள்....

Comments

  1. Casino Games - Drmcd
    Try your luck with an amazing collection of video slot machines at casino. Drmcd 창원 출장안마 has everything you need to play. All 과천 출장마사지 you need to play and 정읍 출장안마 win! Play in 남원 출장안마 demo mode! 안양 출장샵

    ReplyDelete

Post a Comment