இயல்பு அலாதன செய்யேல்.

ஆத்திச்சூடி நீதிகதைகள்

24.இயல்பு அலாதன செய்யேல்.

இயல்பு அலாதன செய்யேல் ! ( இயற்கைக்கு மாறானவற்றை செய்யாதே )

சுரையாழ அம்மி மிதக்கிறது’ என்பது ஒரு பழமொழி.
நீரில் மிதக்க
வேண்டிய சுரை ஆழ்வதும், மூழ்கிவிட வேண்டிய அம்மி மிதப்பதும்
இயற்கைக்கு மாறானவை.

கனமற்ற பொருள் ஆழ்வதும் கனமுள்ள பொருள்
மிதப்பதும் இயற்கையில் நிகழாதவை.

     பெரியோர் சிறப்பு அடைவதும், சிறியோர் சிறுமை அடைவதும் உலக
இயற்கை. இம்முறை மாறிச் சான்றோர் மூலையில் ஒடுங்கி வாழ, கீழ்மக்கள்
செருக்கித் தலை நிமிர்ந்து நடப்பது உலக இயற்கைக்கு மாறானது; சுரையாழ
அம்மி மிதப்பது போன்றது. இக் கருத்தை,

    உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
    நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்
    வரைதாழ் இலங்கருவி வெற்ப அதுவே
    சுரையாழ அம்மி மிதப்பு
                                                (123)

என்று பழமொழி நானூறு விளக்குகின்றது.

மேலும் நாம் இயற்கைக்கு மாறான செயல்பாடுகளை குறைத்து கொள்ளவும் அடியோடு  நிறுத்தவும் கடமைபட்டு உள்ளோம்.

முதலில்

நெகிலி பயன்பாடு..

சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.

இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.

மேலும் உணவு பொருள்களில் மரபனு மாற்ற பட்ட உணவு பொருள்கள்...
இது நம்மையும் அழித்து நம் சந்ததியினரையும் அழிக்கும்..

அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை
ஆனாலும் இன்னறும் அந்த எமனை தெரிநதே வாங்கி சமைத்து உண்ணுகிறோம்..
அதுதான்

சீமை கோழி கறி..
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வில் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்த விதமான வழிகாட்டுதலும் இல்லாத நிலையில், கறிக்கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது, இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட தினசரி நோய்கள் பலவற்றுக்கு பல்வேறு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுகும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்ட இந்த மிகப் பெரிய ஆய்வில், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40% மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இப்படி இயற்கைக்கு மாறாக நீஙகள் எதை செய்தாலும்.. அதற்க்கு நீங்கள் மிக பெரிய விலை கொடுத்தே ஆக வேண்டும்..

இதைதான் ஔவையார் அன்றே கூறியுள்ளார்

சிந்தித்து செயல் ஆற்றுங்கள்..

Comments